நாகபுரி கொடிப் போராட்டம்
1926 – ம் ஆண்டு நாகபுரிக் கொடி ஏந்திச் செல்லக்கூடாது என்று அரசு தடைபோட்டிருந்தது. அந்தத்டையை மீறுமாறு தொண்டர்களுக்கு காமராஜ் உத்தரவிட்டார். தேசமெங்குமிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் – அலை அலையாகப் புறப்பட்டு வந்து நாகபுரிக் கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்புகுந்தனர்.
தீவிர அரசியல் செயற்பாடு தேசத்தொண்டு
காமராஜ் முழு மூச்சாக தேச சேவையில் இறங்கினார். காந்திஜியின் தலைமையி நடைபெறும் சுதந்திர அறப்போராட்டத்தில் தீவிர மன பங்கு கொண்டார். காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த சமயம் அது. தமிழகத்திலும் மூலைமுடுக்கெல்லாம் ஒத்துழையாமை இயக்கம் முழு வேகத்தில் நடந்துக்கொண்டிருந்தது.
எளிமையால் உயர்வு பெற்ற உத்தமர்
பாரத அரசியலில் தமக்கென ஒருதனிச் சிறப்பைப்பெற்றுத் திகழ்ந்தவர் காமராஜ் அவர்ரகள். விடுதலைப்போராட்ட காலத்தில் மட்டுமின்றி பிற்காலத்தில் சுதந்திர பாரத்த்தில் பெருந்தேசியத் தலைவர்களாக திகழ்ந்தோரில் பெரும்பான்மையினர் பெரிய படிப்பாளிகள்- பட்டம் பெற்றவர்கள்- பெரும்பான்மையினர் புகழ் பெற்ற வழுக்குரைஞர்களாக இருந்து அரசிலில் குதித்தவர்களாக இருந்தார்கள். தலைவர் காமராஜ் அவர்களோ மிகச் சாமானிய கல்வியறிவு பெற்ற ஒரு கிராமத்துச் சிறுவராக … Continued
மண்ணை நினைத்த மன்னர்
ஒரு அரசியல் தலைவனது எண்ணம் எங்கு சென்றாலும் தனது மண்ணைப் பற்றியே இருக்கவேண்டும். விண்ணில் எறந்து வேறு வேறு நாடுகள் போனாலும் கண்ணில் தன் பிறந்த மண்ணே நிழலாட வேண்டும். ஒரு முறை பெருந்தலைவர் மணிப்புரிக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார்.
எளிமையின் சிகரம்
அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் மறுபதிப்பாகவும் வாழ வேண்டும். அரசியல்வாதிகளின் எளிமையான தோற்றம் அவர்களை மக்களோடு சமப்படுத்தும். பகட்டும் படோபாவமும், ஆடம்பரமும் அகங்காரமும் மன்னர்களிடம் இருந்து அதனாலேயே அழிந்தார்கள். இன்று மக்களை வழி நடத்தும் அரசியல்வாதிகளும் அதே தவற்றைச் செய்யலாமா?