”எண்ணச் சுதந்திரம் வேண்டும் – அதை
எழுதச் சுதந்திரம் என்றென்றும் வேண்டும்
சொல்லச் சுதந்திரம் வேண்டும் – வெறும்
சோற்றுச் சுதந்திரம் யாருக்கு வேண்டும்”

என்றார் ஒரு கவிஞர். எண்ணியதை எண்ணியபடி எழுதுவதற்கும் எண்ணியதை எல்லோர்க்கும் எடுத்துச் சொல்வதற்கும் சுதந்திரம் இருக்கத்தானே வேண்டும்.

ஆனால் இந்தச் சுதந்திரத்தை நியாயத்திற்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் புறம்பாகச் சிலர் பயன்படுத்தி விடுகிறார்கள். எதற்காக எல்லாமே சுயநலத்திற்காகத் தான்.

தமிழ் நாட்டில் மூன்று முறை முதல் அமைச்சராக இருந்த காமராஜர் அவர்கள் பெரிய பேச்சாளர் அல்ல. ஆனாலும் பேசத் தெரியாவரும் அல்ல. எது சொன்னாலும்

”ஆகட்டும். பார்க்கலாமின்னேன்” – என்று ஒரு வரியில் எதற்கும் பதில் அளித்து விடுவார் என்பார்கள்.

காமராஜர் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் பேசாமல் இருந்ததில்லை. அவர் தொண்டனாக இருந்த காலங்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொண்டிற்கும் உழைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான பின்னர், காமராஜர் அளவோடு, சுருக்கமாகப் பேசினார். தமிழக கேள்விகளுக்குத் தக்க பதில் அளித்ததோடு, தேர்தல் பொதுக்கூட்டங்களில் சற்று நேரம் அதிகமாகவே, விளக்கமளித்துப் பேசினார்.

”தண்ணீர் மழையாகப் பெய்யுது. அது ஆறாக ஓடுது. அப்படி ஓடுகிற தண்ணீரை அணைக் கட்டித் தேக்கி வைக்கிறோம். பிறகு அங்கு வாய்க்கால் வெட்டி அதன் மூலம் தண்ணீரை விவசாயத்துக்கு அனுப்புகிறோம். விவசாயத்துக்குப் பயன்பட்டபோது, மிஞ்சும் தண்ணீர் சமுத்திரத்துக்கு போகிறது.

பிறகு என்ன ஆகிறது? இந்த மழைநீர் வற்றி, ஆவியாகி, மேகமாக மேலே போய மறுபடியும் மழையாகக் கொட்டுகிறது. இப்படித்தானே அது பழையபடி சுற்றிக்கொண்டே வருகிறது. அதைத் தடுத்த நிறுத்த முடியும என்ன? அதே போல் தான் பணமும். அது நம்மைச் சுற்றித் தான் வர வேண்டும். ஒரே இடத்திலே அது தேங்கிவிடக்கூடாது.
”மழையில்லை என்றால் யாரும் வாழ முடியாது. மழைக்கு இவ்வளவு பெருமை எப்படி ஏற்பட்டதோ, அதே மாதரி தான் பணத்துக்குப் பெருமை ஏற்பட்டுள்ளது. மழையைப்போலவேதான் பணமும் சுற்றிக்கொண்டு வர வேண்டும். மழை எல்லா இடத்திலும் பெய்கிறமாதிரி, எல்லா இடத்திலேயும் செல்வம் பரவலாக இருக்க வேண்டும். ஒருவரிடத்தில் மட்டும் அது தேங்கக்கூடாது. அதை ஒருஏர் மட்டுமே சொந்தமாக உபயோகிக்கக்கூடாது.”

அகில இந்திய காங்கிரஸ் கமித்டித் தலைவர் ஆன பின்பு காமராஜர் இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து எல்லா மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சிக்காகப் பேச வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. பெருந்தலைவர் காமராஜரின் பேச்சுக்களிலிருந்து சில பகுதிகளை இங்கே கொடுத்துள்ளேன்.

காமராஜரைத் தமிழ் நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி எல்லோரும் வற்புறுத்திய போது,

”எனது நிர்வாகத்தில் நண்பர்களோ கட்சிக்கார்களோ, உறவினர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ தலையிடக்கூடாது. அப்படி நீங்கள் தலையிடாமல் இருந்தால் நான் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன்” – என்று கூறினார்.

”ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டால் அவன் பரம்பரையாகச் சாப்பிட்டானா என்று கேட்பது நியாயமா? ஏழைகளின் குழந்தைகளை வாட விடுவது முறையா? அவர்களைப் படிக்க வைத்தால் தானே முன்னுக்கு வருவார்கள். பணக்காரப் பையன்கள் படிக்கவா நான் முதல் மந்திரியாக இருந்து ராஜாங்கம் நடத்தறேன்?”

”பள்ளிக்கூடங்களைத் திறப்பது பெரிய காரியமில்லை. குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவை ஊட்டித் திறமைசாலிகளாக்க வேண்டும். அதற்குத தகுந்த ஆசிரியர்கள் பொறுப்புடன் நல்ல முறையில் கல்வி புகட்டினால் குழந்தைகளின் அறவு வளரும் பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பித் தான் குழந்தைகளை அனுப்புகிறார்கள்.

”ஒரு யானை அதற்கு ஏற்றபடி சாப்பிடுகிறது. அது சாப்பிடும்பது ஒரு கவளம் சிந்திவிடுகிறது. அந்த ஒரு கவளம் லட்சக்கண்க்கான எறும்புகளுக்கு ஆகாரமாக்க் கிடைக்கிறதே! யானைக்கு ஒரு கவளம் அதன் சாப்பாட்டில் குறைவதால், அது கவலைப்பட வேண்டியதில்லை.

அதே போலத்தான் பணக்கார்ர் கொஞ்சம் வரிப் பணம் கொடுத்தால், அதனால் ஒன்றும் குறைந்து போய் விடாதே! அரசாங்கம் பணக்கார்ர்களுக்கு போடுகிற குறைந்த அளவு வரியைக் கொண்டே, சோற்றுக்குக் கூட இல்லாமல் பிடுங்குகிறோம் என்று பீதியைக் கிளப்ப வேண்டாம்.

பலபேர்களின் பட்டினி தீர அவர்தம் நலவாழ்வுக்கு வழி செய்ய அந்த வரிப்பணம் பயன்படுமே!

”பொருளாதாரத் துறையில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து முன்னேறி இதற்குத் தொழிலும், விவசாயமுமு நல்ல முறையில் வளர்ச்சிப் பெற வேண்டும். அப்போதுதான் தொழில் வாய்ப்புகள் பெருகி, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.”

”காங்கிரஸின் சமதர்மக் கொள்கை பிடிக்காமல் பணக்கார்ர்களும் பெரிய முதலாளிகளும் காங்கிரஸ் மீது கோப்ப்படுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்குக் காங்கிரஸ் மீது கோபம் வரலாமா?

”நாட்டில் கவலையற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டும். அதையும் நாம் வாழ் நாளிலேயே செய்துவிட வேண்டும். உணவு, வீடு, கல்வி, வசதி எதுவும் இல்லை என்ற புகாரே மக்களிடம் இருக்கக்கூடாது”

” மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல் தான் நாட்டின் லட்சியத்திற்கு அஸ்திவாரம் எனவே மாணவர்கள் அதைப் பற்றி நன்கு தெரிந்து செய்ய வேண்டும்.

ஆசிரியர்களைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து. மாணவர்களைக் கொண்டு அரசியல் பலம் பெற நான் விரும்பவில்லை. நாங்கள் மாணவர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவோம் என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம்.”

”நம் சுகத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. நாம் குழந்தைகளைப்ப பற்றிபக் கவலைப்படவேண்டும். கழந்தைகள் நல்வாழ்வு வாழ வேண்டும். குழந்தைகளுக்கு நிறையப் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். மதிய உணவு வழங்குகிறோம். ஆணியும் (சீருடை) கொடுக்கிறோம்.”

”நம்மால் நிலையான அரசு அமைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. எப்படியாவது யாரோடு சேர்ந்தாவது ஆட்சியில் பங்கு பெற முயற்சிக்கக்கூடாது.”

காங்கிரஸ் என்னும் மரம் நாட்டு மக்களுக்கு நல்ல நிழலைத் தந்துகொண்டு இருக்கிறது. இப்பொழுது சிலர் இதை வெட்டி விட வேண்டும் என்கிறார்கள். இதற்குத் தகுந்தாற்போல இன்னொரு மரம் இருந்தாலும் பரவாயில்லை.

இதைத் தவிர வேறு மரமே கிடையாது! இந்நிலையில் இருக்கின்ற மரத்தையும் வெட்டி விட்டு வெயிலுக்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறார்களே!! அவர்கள் பின்னால் நீங்கள் போகலாமா?”

நாம் நம் உழைப்பைத் தந்து அதற்கு ஊதியமாகப் பெறும் ரூபாய் நோட்டுக்கள் வெறும் காகிதங்களே. ஆனாலும் அதை நிறை மனதோடு ஏற்கிறோம். சேமித்து வைக்கிறோம். எந்த நம்பிக்கையில்?

ஒவ்வொரு காகித நோட்டிலும் நாட்டின் அரசு ஒரு சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறது. அந்தக் காகிதத்தில் குறிக்கப்பட்டுள்ள தொகையை என்றும் எந்தப் பொருளாக விரும்புகிறோமோ அந்தப் பொருளாகப் பெறும் உரிமை நமக்குத் தரப்பட்டு இருக்கிறது. அரசுகள் மாறலாம். தலைவர்கள் மாறலாம். கொள்கை வேறுபாடுகள்ள அரசுகள் அமையலாம். ஆனால் தலைமை வங்கி (ரிசர்வ் பேங்க்) அல்லது நீதித்துறை அளித்த ‘சத்தியவாக்கு’ என்றும் மாறாது. மாறக்கூடாது.”

”மாணவர்கள் கல்விகற்பது வெறும் அறிவு வளர்ச்சிக்காக மட்டும் பயன்படாமல் நாட்டு முன்னேற்றத்துக்கும் பெரிதும் உதவுகிறது. பல்வேறு விஞ்ஞான தொழில் நுணுக்க நிபுணர்கள் மாணவர்களிடமிருந்து தோன்றி அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்பட்டு வருகின்றனர்”

எனினும் நமது வளர்ச்சிக்கு, வேகத்துக்கு அது போதுமானதாக இல்லை. எத்தனையோ பற்றாக்குறைகளைப் போலவே, நிபுணர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மாணவர்கள் நன்கு கற்று, விஞ்ஞான தொழில்நுட்ப மேதைகளாகி நாட்டுக்குப் பாடுபட வேண்டும்.”

சமதர்மம் என்றால் ஏழ்மையைச் சமமாகப் பகிர்ந்து கொடுப்பது என்று அர்த்தமல்ல. மேலும், மேலும் உற்பத்தி செய்தால், அதே சமயத்தில் அதனால் ஏற்படுகின்ற செல்வம் ஒரு ணிலருடைய இரும்புப் பெட்டிகளில் சென்று ஐக்கியமாகி விடாமல், பலருக்கும் பயன்படும் வித்ததில் பரவலாகும்படி பார்த்துக் கொள்ளுதல், இவை தான் சமதர்மத்தின் நோக்கம்.”

”ஜனநாயக சோஷலிசமே இந்திய நாட்டிற்கு என்றும் ஏற்றது. முன்னேற்றம் அடையச் செய்யுற ஒரு காரியத்தை அந்த அம்மா மறு பரிசீலனை செய்யனும். அதி தான் பத்திரிக்ககைகளைத் தண்க்கை செய்யுறதாலே நாட்டிலே நடக்கிற உங்கள் நிலைமை அந்த அம்மாவுக்குக் கூடத் தெரியாமல் போய் விடும். கடைசிலே அது அவுங்களுக்கே ஆபத்தா முடியும்.”

”மக்களுடைய மனதில் அரசாங்கம் என்று ஒன்று தனியாக இருக்கிறது. அரசாங்கமே எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது. இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும்.”

”நமக்கு நல்ல திறமை இருக்கிறது. ஆனால் நாம் வீணாகச் சோம்பலாகத் திரிகின்றோம். சோம்பலுக்கு இடம் கொடுக்கக்கூடாது. ஏன் ஐயா சும்மா திரிகிறாய் என்று கேட்டால், நம் தலையெழுத்து, நமக்கு இவ்வளவுதான் என்று கூறுகிறோம். இதெல்லாம் வீண் பேச்சு. இப்படிப் பேசிக் கொண்டே இருந்தால் முன்னேற முடியாது.”

”நம் தாய்மார்கள் படித்துவிட்டால், நாட்டிலுள்ள தொந்தரவுகள் நீங்கி விடும். நாம் சம்பாதித்த சுதந்திரமும் நல்ல முறையில் பாதுகாக்கப்படும்.”

”சம்பாதிக்கட்டும். வரி கொடு என்றால் மாட்டேன் என்பதா? நாங்கள் ஆலையை மூடி விட்டால் சம்பாதிக்க் முடியுமா? மின்சாரத்தை நிறுத்தி விட்டால் தொழில் பங்கை முடியுமா?

ஆகவே, அதிர்ஷ்டம், சாமர்த்தியம் என்றெல்லாம் சொல்லாமல் வரி கொடுங்கள் என்று கேட்கிறோம். இது தவறா? மாடு மேய்ப்பவன் அப்படியே இருக்கட்டும் மென்று சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்த நாங்கள் தயார் இல்லை. அதற்கு வேறு ஆளைப் பாருங்க”

”மகாத்மா காந்தி எதை இலட்சியமாக் கொண்டிருந்தாரோ அது தான் நம் இலட்சியமும் கவியரசர் பாரதி என்ன சொன்னார்? ”தனியொருவருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” – என்று பாடினார்.

மகாத்மா காந்தியின் உள்ளத்தைப் பாட்டாக எடுத்துக் காட்டினார். நமது மாபெரும் தலைவர், நேருஜி ”ஏழைகளின் நல்வாழ்வு” – என்ற இலட்சியத்தை வைத்துக் கொண்டு தான் காங்கிரஸ் ஆட்சிக்குத் தலைமை ஏற்றுக்கொண்டார்.
”எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று இப்போது பாடுகிறார்களே. அதை மகாத்மா காந்தி தான் உருவாக்கினார்; ஏழைகள்தான் இந்த நாட்டின் கடவுள் என்று அவர் குறிப்பிட்டார். அவர்களுக்குத் தரித்திர நாராயணர் என்று பெயர் வைத்தார். அவர்களுக்காக ஒரு ராஜ்யத்தைச் சம்பாதித்துக் கொடுத்தார்.”

நாட்டிலே பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும். கிராமங்ள் முன்னேறும். ஏன், தேசமே முன்னேறும்.”

”ஒருவன் பட்டினியாக இருக்கிறான் என்றால் அவன் யார்? என்ன சாதி? என்றெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?

திராவிடன் பசி ஒருவிதமாகவும் ஆரியன் பசி வேறுவிதமானதாகவுமா இருக்கும்? பட்டினி எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆகவே பாரபட்சமின்றி எல்லோரது பட்டினியையும் போக்க வேண்டும்.”

”இந்தி மொழிகள் விஷயத்தைப் பொறுத்தவரை இந்தி மோழி பேசுகிறவர்கள்ப் பற்றி நாம் அறிந்து கொள்ள நாம் இந்தி மொழியைப் படிக்கணும். நம்மைப் பற்றி அறிய அவர்கள் நம் தமிழ் மொழியைப் படிக்கணும்.”

”பழைய காலத்தில் காசியாத்திரை போவதென்றால் சிரமம். பல மாதங்கள் ஆகும். இப்போது டில்லிக்கு போக வேண்டுமானாலும் சீக்கிரத்தில் போகலாம். ரயில், மோட்டார், ஆகாய விமானம் எல்லாம் இருக்கின்றன.

அதாவது நாட்டில் இன்று பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதை உணர்ந்து நாம் வாழவேண்டும். ஆனால் சிலர் இதை உணர மறுக்கிறார்கள். ட்டை வண்டியில் சவாரி செய்த காலம் தான் உயர்ந்தது என்கிறார்கள். அவர்களை எப்படித் திருத்துவது?”

”வயிற்றுக்கு முதலில் கஞ்சி கிடைத்தால் போதும். பாயசம், வடை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். பட்டினி இருப்பவர்கள் என் மேலே கோப்ப்படுவது எனக்குப் புரிகிறத். ஆனால், தினசரி மூன்று வேளை வயிறாரச் சாப்பிட்டுக் கொண்டு, அதே சமயத்தில் பாயசத்துக்குப் பால் இல்லை, அல்வாவுக்குச் சர்க்கரை இல்லை என்பவர்கள் கோப்ப்படுவது தான் எனக்குப் புரியவில்லை.”

”புதிய சமுதாயத்தை அமைக்க வேண்டுமானால் பழைய பழக்க வழக்கங்களை அப்படியே வைத்துக் கொள்ள முடியுமா? அதற்காக்ப் பழையதெல்லாம் தப்பு என்று சொல்ல்லாமா? கூடாது. ஒரு புது வீட்டுக்குக் குடித்தனம் போகும்போது, பழைய டின், துடப்பம், ஓட்டை உடைசல் எல்லாவற்றையும் விட்டு விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு போகிறோம். அல்லவா? அது போல் பழமையில் இருக்கிற நல்ல விஷயங்களை எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

”நமது சமுதாயத்தில் உழைப்புக்கு மரியாதை இல்லை. உழைப்பவனைக் கூலிக்காரன் என்று கூறுகிறோம். ஆனால் கடத்தல்காரனை, ”கடத்தல் மன்ன்” என்று அரசர் அந்தஸ்த்தில் அழைக்கிறோம்.”

”சுதந்திரம் வந்தால் நாட்டில் மக்கள் நிலை உயரும் என்பதை அறிந்தே பலர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காகவே மகாத்மா காந்தியின் தலைமையில் பலர் ஜெயிலுக்குச் சென்றனர். ஆனால் யாரும் மந்திரியாவதற்கு ஜெயிலுக்குப் போகவில்லை.”

பல்வேறு மொழிகள் பேசுகிறவர்களும் பழக்க வழக்கங்கள் உள்ளவர்களும் இருப்பதினால் ஒரு நாட்டை வெவ்வேறு பிரிவுகள் என்று சொல்லவோ, பிரிக்க வேண்டும் என்று சொல்லவே முடியாது.”

”என்னால் சார்ந்திருக்க முடியாது. இப்போதே பதவியில் உட்கார வேண்டும் என்றால் முடியுமா? நெல்லை இன்றைக்கு விதைத்து விட்டு, நாளையே அறுவடை செய்ய வேண்டுமென்று அரிவாளை எடுத்துக்கொண்டு போய் நின்றால் நடக்குமா?”

”எப்போதும் தேவை ஏற்படுவது வளர்ச்சிக்கு அடையாளமு முன்பு எல்லாம் கிராமங்களில் சட்டை கூடப் போட மாட்டார்கள். இப்போது அப்படி இல்லை. எல்லோரும் சட்டை போடுகிறார்கள்.

ஆகவே நிறையத் துணி வேண்டியிருக்கிறது. துணிகளைத் தயாரிக்க ஆலைகள் வைக்க வேண்டும். ஆகவே தேவை ஏற்படுகிறதென்றால் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.”

வடக்குத் தெற்கு என்று வேற்றுமை வேண்டாம். இந்திக்காரரோடு பேசுவதற்கு நாம் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும். அதே போல் நம்மிடம் பேசுவதற்கு இந்திக்கார்ர்கள் அவசியம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

”வட இந்தியாவையும் நான் பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டிலோ மூலைமுடுக்குகளில் உள்ள எல்லாக் கிராமங்களையும் கண்டு இருக்கிறேன். இந்தியா ஒரே தேசம்தான் ஒரே சக்திதான்.”

”நேற்று, இன்று, நாளை, முக்காத்தையும் சரித்திரத்தையும், நாம் உணர வேண்டும். நாம் மட்டும் வளர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்.

இது ஜனநாயக நாடு. இங்கே எஜமானர்கள் யார்? வாக்காளப் பெருமக்கள்தான் அவர்கள் தான் உண்மையான எஜமானர்கள்.”

கல்வி நாட்டிற்கு அவசியம் தேவை. ஆனால், கற்றவர், கல்லாதவர் என்று ஒரு புது சாதி உண்டாகிவிடக்கூடாது.”

”தண்ணீர் கீழ்நோக்கி ஓடுகிறது. திடீரென்று அது நின்று விட்டால் தேக்கம் ஏற்படுகிறது. அதைப் பகிர்ந்து கொடுக்கவேண்டும். அதேபோல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருகும் காலத்தில் அந்த வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கி விடாமல் பிரித்து தர வேண்டும். அப்படிச் செய்யும் போது கோப்ப்படுவதற்கு என்ன இருக்கிறது?”

”சமதர்மத்தில் என்ன கெடுதல் இருக்கிறது? பட்டினியாக இருப்பவர்கள் எத்தரை நாளைக்கு இப்படியே இருப்பது? ஒரு சிலர் செலவத்திலும் இருக்கலாமா? இந்த வேறுபாடு போய் எல்லோரும் சம்மாக இருக்க வேண்டும் என்பது தான் சமதரம்ம் அதில் என்ன தப்பு?”

”உங்களைக் ‘கேடிலாக்’ காரில் போக வேண்தாமென்று சொல்லவில்லை. ஆனால், போக்குவரத்து நெரிசலின் போது, நாலு தெருச் சந்திப்பில் வெறும் நூறு ரூபாய் சம்பளம் வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள் நிறுத்த என்று கேட்கிறீர்களே! அவன் நிறுத்தி வழியமைக்கக் குடுக்கலேன்னா, நீங்களும் உங்க காரும் நொறுங்கிப் போயிடுமேன்னேன். அதே போலத் தான் சமூகத்திலும் சில கட்டுப்பாடுகள் தேவைன்னு நாங்க சொல்கிறோம்”

ரூபாய்க்கு மூணு படி அரிசி போடுவோம்னு சில படிச்ச தலைவர்களே பேசறாங்க. அது முடியுமான்னு நானும் பல பொருளாதார நிபுணர்களைக் கேட்டேன். அவர்கள் அது சாத்தியமே இல்லேங்குறாங்க. பாமர ஜனங்களின் ஓட்டுக்களை விக்குறத்துக்குப் படிச்சவங்க இப்படிப் பொய் சொல்லலாமா?

” வசதியாக வீடு கட்டிக் கொள்கிறவர்கள், தங்கள் வீட்டு வேலைக்கார்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடவேண்டும். இல்லா விட்டால் குடிசைப் பிரச்சனை தீராது.”

”கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இது நமது நாடு. நாம் எல்லோரும் இந்தியர்கள என்ற உணர்ச்சி வேண்டும். தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்ளலாம். ஆனால் இந்தியன் என்றால் இன்னும் அதிகமான பெருமை கொள்ள வேண்டும். இந்தியா வாழ்ந்தால் தான் தமிழ் நாடும் வாழும்.”

பதவி என்பது யாருக்கும் சொந்தமானதல்ல. அது என்ன தனி உடைமையா? கிடையவே கிடையாது. மந்திரி பதவி பரம்பரைப் பாத்தியதை அல்ல. மகாராஜாக்கள் பதவி போன்றதும் அல்ல. மக்கள் ஒத்துழைக்கும் வரை மட்டுமே பதவி நீடிக்கும்.”

”நாட்டில் உள்ள பஞ்சம், பசி, பட்டினி, பிணி, வேலையின்மை ஆகியவற்றைப் போக்குவதி ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமான வேலை அல்ல. அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களுடைய பிரச்சினை தேசியப் பிரச்சினை ஆகும்.”

”கடவுளுக்கு தேங்காய் உடைத்துப் பூமாலை சாத்தி பூஜை செயதால் மட்டும் போதும். அவர்கள் சும்மா இருந்து விடுவார். நாம நினைத்ததைச் செய்து கொண்டே போகலாம் என்று எண்ணக் கூடாது.”

”கோடி ரூபாய் வைத்திருப்பவனைக் கோடீஸ்வரன் என்கிறோம். பணமு படைத்தவன் என்பதற்காக ஒருவனை ஈஸ்வரனாக்கி கடவுளாக்கி விடும் இந்நப் புத்தி சமுதாயத்துக்கு எப்படி நன்மை தரும்?”

”நாணயக் குறைவால் தொழில்கள் கெடும். தாங்கள் காட்டும் மாதிரிப் பொருளகளையும் போலவே சரக்கை அனுப்ப வேண்டும். மாதிரி நன்றாகவும், சரக்கு மோசமாகவும் இருக்கக்கூடாது. இதுவே வணிகர்களுக்கு நான் கூறும் அறிவுரை.”

வயோதிக காலத்தில் வேலை செய்ய இயலாமல் போய்விடும். நம கதி என்ன ஆகும் என்ற பயம் முதியவரிகளுக்கு உண்டாகிறது. அவர்களுடைய இந்த அச்சத்தை நாம் போக்க வேண்டும்.”

”மந்திரியாக இருப்பது மாலை வாங்கிக் கொண்டு சுற்றுவதற்கல்ல. நம்மை நம்பி ஆட்சியை ஒப்படைத்த மக்கள் அனைவருக்கும் சேவை செய்வதற்காகத்தான்.”

இவ்வளவு செய்தும் குழந்தைகள் போல இவனும் அப்பபடியே இருக்க வேண்டுமானால் அரசாங்கம் எதற்கு? மந்திரிகள் எதற்கு? பலம் படைத்தவர்கள் அதிகாரம் தானே இருக்க வேண்டும்?”

”பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்று சொன்னாங்க். அப்போதைக்கெல்லாம் நான் நம்பலே. ஆனால், இப்பத் தான் தெரியுது. பணம், பாதாளமென்ன. அதுக்குக் கீழே வரைக்கும் கூட பாயுமின்னு.”

”ஏதோ சில கட்சிகள் கூடிக் கூட்டாளி அமைத்துத் தேர்தலில் வெற்றி பெற்றால் நிலையான அரசாங்கம் எப்படி அமையும்? சர்க்கசில் சிங்கம், புலி, கரடி, குரங்கு, நரி ஆகியவை கூண்டில் அடைபட்டு அடங்குவது போல, ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கொள்கைகளை உடைய கட்சிகளது கதம்ப சர்க்கார் தானே நடக்கும்? நாட்டில்அமைதியும் ஒழுங்கும் இருக்குமா? அவர்களது பிரச்சினையைக் கவனிக்க முடியுமா? பொது மக்கள் யோசிக்கவேண்டும்.”

”நாமெல்லோரும் பெரியவர்காகி விட்டோம். நமக்குப் படிப்பு வராது. நம்முடைய குழந்தைகளாவது படிக்கட்டும். அவர்களுக்காவது எது நியாயம், எது அநியாயம் என்று தெரியட்டும். அதற்காகத் தான் நாங்கள் நிறையப் பள்ளிக் கூடங்களைத் திறக்கிறோம். எல்லோரும் படிக்க வசதி செய்து கொண்டு இருக்கிறோம்.

”ஏழைகள் கையில் பணப புழுக்கம் நன்றாக இருந்தால் தான் நாடு நல்ல படியாக இருக்க முடியும். புதிய தொழிற்சாலைகளைக் கட்ட முடியும். ஏழைகள் நிறைய காப்பி, டீ சாப்பிடுவதால் சர்க்கரை மிகுதியாகத் தேவைப்படுகிறது. உடனே சர்க்கரை ஆலை வைக்கிறோம். ஆக ஏழை கையில் பணமிருந்தால் தான் வாழ்க்கை தரம் உயரும். தொழில்கள் வளரும்.”

”இந்தக் கிராமத்திலே ஏன் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை?” – காமராஜர்.

”இந்தக் கட்சிக்கார்ர்கள் நம் கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை. அதனால் தான் பள்ளிக் கூடம் திறக்கப்படவில்லை” என்றார் முதலமைச்சரின் உதவியாளர்.

”இது ஜனநாயக நாடு . மக்கள் தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம்.

அது அவர்களின் ஜனநாயக உரிமை. அதனால் அரசாங்கம் எல்லோருக்கும் பொதுவானது. உடனே இந்தக் கிராமத்துக்கு பள்ளிக் கூடம் திறக்கச் செய்யுங்கள்” – என்றார் காமராஜர்.

ஒரு கிராமத்துக்குச் சென்றார் முதலமைச்சர் காமராஜர். அந்த ஊர்த் தலைவர்கள் அவரிடம் வந்து,

”ஐயா! எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்வதற்குப் பாதை அமைத்துத் தந்திட வேண்டும்” – என்றார்கள்.

காமராஜர் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே,
” நான் நீங்களெல்லாம் நன்றாக வாழ்வதற்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை கேட்கிறீர்கள்!” என்றார்.

காமராசர் மேடையில் இருக்கும் போதே ஒரு பேச்சாளர்,

”காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால், உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்” என்று பேசினார்.

அடுத்துப் பேசிய காமராஜர்,

” நடக்கிறதைச் சொல்லணும். நாங்கள் நம்புகிறதைச் சொல்லணும். உழுபவனுக்கு நிலம் சொந்தமாகனுமின்னு சொல்லுறீங்க. சரி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அப்படியே தந்து விடுவதா வச்சுக்குவோம்.

அப்புறம் நெல் அறுக்கிறவன், அறுக்கிறவங்களுக்கே நெல் சொந்தம் என்பான். அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கே அரிசி சொந்தமின்னு சொல்லுவான்” – என்றார்.

‘உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று பேசியவரும், ஏன் கேட்டுக் கொண்டு இருந்த பொது மக்களும் அசந்து போனார்கள். இது கூடக் காமராஜரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பேச்சுத்தான்.

1971 – ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிஸ் அமோக வெற்றி பெற்றது. காமராஜர் சார்ந்திருந்த பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது.

தொண்டர்கள் காமராஜரிடம் வந்து,

”ஜயா! அவர்கள் வெற்றிக்கு காரணம் ”ரஷ்ய மை” வைத்து ஏமாற்றி விட்டார்கள். வாக்குச் சீட்டில் ரஷ்ய மை தடவிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட காமராஜர்,

”ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சா இது. நாம் தேர்தலிலே தோற்றதிற்குக் காரணம் ‘மை’ என்கிறீர்களே! அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை” – என்றார்.

முதலமைச்சர் ஆனதும் காமராஜர் பேசிய பேச்சில் ,

” நான் ஏழைகளின் துயர் நீக்கவே முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளேன். அதற்கு இடமில்லை என்றால் எனக்கு இப்பதவி தேவை இல்லை.” என்றார்.

ஏழையாகப் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, எந்தச் சூழ்நிலையிலும் ஏழைகளின் துயரங்களை நீக்கவே எண்ணிப் பாடுபட்ட காமராஜரை ”ஏழைப் பங்காளன்” என்று சொல்வதிலே தவறில்லை தானே.

அப்போது காமராஜர் பதவியில் இல்லை. நாகர்கோயில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்தார். தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது.

அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்திருந்தார். அவர் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். புது டெல்லியிலிருந்து தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இதைக் காமராஜரிடம் கூறினார்கள்.

”பார்க்க முடியாதுன்னேன்” – என்று காமராஜர் பதில் சொல்லி விட்டார். ஏன் இப்படிச் சொல்கிறார்? வந்து பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர். குழப்ப மடைந்தார்கள் கூடியிருந்தவர்கள்.

அவர்களைப் பார்த்துக் காமராஜர் சொன்னார். அண்ணாத்துரை அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர்அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்க விரும்பினார். பார்க்க மறுத்திவிட்டாராம் நிக்ஸன். அப்படிப்பட்டவரை நான் ஏன் பார்க்க வேண்டும்” என்றார் காமராஜர்.

இது காமராஜர், தானும் ஒரு தமிழன் என்று தன்மானத்தையும், மாற்றுக் கட்சிக்காரர் என்றாலும் அண்ணாத்துரைக்கு அமெரிக்க அதிபர் சந்திக்கச் சந்தர்ப்பம் கொடுக்காததற்குக் கண்டனமும் தெரிவித்ததையும் தானே காட்டுகிறது. அவர் சுருக்கமாகப் பேசினாலும் சுறுக்கென்று பேசி இருக்கிறார்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களது பேச்சுக்கள் பலவற்றைத் தொகுத்துப் பார்த்தோம். அவரது பேச்சுக்களில் நகைச்சுவையும் உள்ளார்ந்த நற்கருத்துகளும், பொதுவான போதனைகள் போன்ற தத்துவங்களும் இருந்ததனைக் கண்டோம்.

”ஆகட்டும் பார்க்கலாமின்னேன்” – என்று சொல்வதைத் தவிரக் காமராஜருக்கு வேறொன்றும் பேசவே தெரியாது என்று அவரைத் தாழ்த்திப் பேசியவர்கள் கூடக் காமராஜரத் பேச்சுக்களை கேட்டிருந்தால் நிச்சயமாக வாழ்த்திப் பேசியிருப்பார்கள்.

காங்கிரஸ் ஊழியர்கள் மத்தியிலே தொண்டனாக, பின்னர் தலைவனாக அவரது பேச்சு ஒரு விதமாக இருந்தது. முதலமைச்சர் ஆன பின்பு காமராஜர் பேச்சு வேறு விதமாக மாறியிருந்தது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த போது, இந்திய முழுவதக்கும் ஏற்றதாக அவரது பேச்சுக்கள் இருந்தன.

கோவைக் கல்லூரிகளின் சமூகப் பணிக் கூட்டு மன்ற அமைப்புத் துவக்க விழிவிலே, கல்லூரி, மாணவ – மாணவியர்களிடையே அமைப்பைத் தொடங்கி வைத்து, ” எது சமூக சேவை?” என்று காமராஜர் மணிக்கணக்கில் பேரூரை ஆற்றிப் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார் என்பது பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சரித்திரம் சான்று பகர்கிறதே. எனவே காமராஜர் படைத்தவர் தான் என்பதை யாரும் மறுக்கவே முடியாது.