கல்விச் சாதனைகள்

கல்வி என்பது, உயர் குடிப் பிறந்தோர்கள் மற்றும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்ற நிலைமை மாறிற்று. கல்வி கற்பது எளிதாக்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கும் கல்வி. இலவசக் கலவி என்றானது.

எங்கும் கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டன. எல்லோருக்கும் இலவசக்கல்வி. மதிய உணவு – சீருடைகள் – என்றெல்லாம் திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தினார் முதலமைச்சர் காமராஜர். கல்வி நிலை உயர்ந்தது. எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஏழை, எளியவர்களுக்கும் எட்டியது. இதனால் ”கல்விக் கண் திறந்தவர்” என்று காமராஜரைப் பல்லோரும் பாராட்டினார்கள்.
Continue Reading

தொழிற் சாதனைகள்

பெருந்தலைவர் காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில் தொழில் துறைகளில் என்னென்ன அரும்பெரும் சாதனைகளைச் செய்தார் என்பனவற்றை இங்கே விரிவாகக் காண்போம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காமராஜர், கட்சிக்காரர்கள், நேருஜி போன்றவர்களின் கட்டாயத்துக்கேற்ப முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தார். காமராஜர் என்றும் பதவியைத் தேடி அலைந்தது இல்லை. பதவிகள் தான் அவரைத்தேடி வந்தன. அப்படி வந்த பதவிகளையும் அவர் வேண்டாம் என்றே தட்டிக்கழித்தார். முதலமைச்சர் பதிவியைக்கூட அவர் தட்டிக் கழிக்கத்தான் செய்தார். ஆனால் தலைவர்களின் நிர்பந்தத்தினால் அவர் ஏற்றுக்கொண்டார்.
Continue Reading

அரசியல் சாதனைகள்

காமராஜர் பண்டித நேருவுடனும், மற்ற தலைவர்ளுடனும் காங்கிரசைப் பலப்படுத்தக் கலந்து ஆலோசித்தார். தானே ஒரு திட்டத்தை உருவாக்கினார். கடைசியாக அந்தத் திட்டத்தை அவர் வெளியிட்டார். மூத்த தலைவர்கள் பதவியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபடவேண்டும். இந்தியா முழுதும் காங்கிரஸ் இயக்கத்தை வலிமை உடையதாக ஆக்க வேண்டும் என்பதே காமராஜரின் திட்டம். இதைக் கே.பிளான் (காமராஜர் திட்டம்) என்றார்கள்.

காமராஜரின் இந்தத் திட்டத்தைப் பிரதமர் நேருஜியும், மற்றத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். முன் உதாரணமாக முதலமைச்சராக இருந்த காமராஜரே பதவியிலிருந்து விலகினார். தனது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பெரியவர். கே. பக்தவத்சலத்தைத் தமிழ் நாட்டின் முதலமைச்சராக்கினார்.
Continue Reading

பேச்சு சாதனை

”எண்ணச் சுதந்திரம் வேண்டும் – அதை
எழுதச் சுதந்திரம் என்றென்றும் வேண்டும்
சொல்லச் சுதந்திரம் வேண்டும் – வெறும்
சோற்றுச் சுதந்திரம் யாருக்கு வேண்டும்”

என்றார் ஒரு கவிஞர். எண்ணியதை எண்ணியபடி எழுதுவதற்கும் எண்ணியதை எல்லோர்க்கும் எடுத்துச் சொல்வதற்கும் சுதந்திரம் இருக்கத்தானே வேண்டும்.
Continue Reading