அரசர்களை உருவாக்கிய அரசர்

posted in: Leadership | 0

காலமும் மாறுகிறது; ருத்தும் மாறுகிறது. எது மாறிமாலும் அரசியலின் அடிப்படை மரியாதை மட்டும் மாறவேகூடாது. அரசியல்வாதிக்ள் எல்லாமும் தெரிந்தவராக இருக்கவேண்டுமே தவிர எல்லோருக்கும் தெரிந்தவராக மட்டும் இருக்கக்கூடாது.

வந்ததார்கள், போனார்கள், வருவார்கள் போவார்கள். ஆனாலும் யார் வர வேண்டும்? எது வர வேண்டும்? இதை தீர்மானிக்கும் திறன் நமக்கிருந்தால் யாரும் வந்துவிட முடியாது. அவர்களும் எதையும் செய்துவிட முடியாது.


விழிப்புணர்வற்ற வாக்காளர்கள் நிறைந்தால், அக விழிகளற்ற வேட்பாளர்களே அதிகம் வெற்றி பெறுவார்கள் எனவேதான் கல்விக் கண்ணைத் திறந்து கற்றவர் மலியக் காரணமானார் காமராஜர்.

திட்டமிட்டு ஒரு சமூகத்தைக் கூர்மைபடுத்தியவர் பெருந்தலைவர்.

தலைமை ஏற்பவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பல.

தன்னலமின்மை, பதவி ஆசையின்மை, தியாகம், நேர்மை, நாணயம், நம்பிக்கை, திட்டமிடல், தீர்மானித்தலை, வழி காட்டல், வி நடத்தல் இவை போன்று பல பண்புகள் இருக்கவேண்டும்.

எல்லாம் இருந்தாலும் தியாகம் மட்டுமே மிக முக்கியமான பண்பாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஏனெனில் தியாக உணர்வு இருப்பரிடம்தான் விட்டுக் கொடுத்தல், தோலவியை ஏற்றுக் கொள்ளுதல், பதவியை விட பதவியளித்தவர்களை மதித்தல, பதவியைத் துறக்கும் துணிவு ஆகியவை இருக்கும்.

இந்திய அரசியலைப் பொறுத்தவரை ஏணிகளாக இருந்தவர்கள் இருவர்தான். பலர் பதவிகளை அடையத் தங்களை படிக்கட்டுக்ளாக்கிக் கொண்டவர்களுள் முதலாமவர் பாரதத் தந்தை மகாத்மா காந்தி, இரண்டாமவர் பெருந்தலைவர். காந்தியும், கருப்புக் காந்தியம் தங்களை ஏணிகளாக்கித் தலைவர் பதவியடைய விரும்புவோர் ஏறிச் செல்ல ஏதுவாயிருந்தனர்.

அரசராக இருப்பதற்கு ஆளும் தலைமை என்கின்ற தகுதி போதும். அரசர்களை உருவாக்குவதற்கோ பெருந்தலைமை எனும் தகுதி வேண்டும்.

அத்தகுதி பெற்றதால்தான் காமராஜர், பெருந்தலைவர் என்னும் பெருமை பெற்றார்.

காந்தி மகாத்மாவானார். அதுபோல் தலைவர் பெருந்தலைவர் ஆனார்.

தாமே பெரும் பதவிகளை அடைய வேண்டுமென்று துடிப்பவர்கள்தாமே அதிகம். அதிகார வெறிபிடித்து அலைபர்க்ள்தானே அதிகம். ஏறிய நாற்காலியை விட்டு இறங்க மறுப்பவர்கள்தானே அதிகம். இறங்கினாலும் மறுபடியும் ஏறத் துடிப்பதுதானே இப்போது காணப்படும் இயற்கை.

ஆனால் முதலமைச்சர் பதவியை உதறிவிட்டு இறங்கியதால்தான் பிரதமர் பதவி பின்னால் வந்தது. எந்த எதிர்ப்பும் இன்றித்தானே ஏற்றுக் கொள்ளும் நிலை இருந்தபோதும் அதை ஏக முத்தார், காமராஜர் அதற்குக் காரணங்கள் உண்டு.

‘முதியோர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு பதவி விலக வேண்டும்’ என்று முதல்வர் பதவியையே விட்டுவிட்டவர் பெருந்தலைவர்.

அதேநேரம், பிரதமர் பதவி தயாராக இருந்தபோது தானே ஏறி அமர்ந்து கொண்தால் அது கொள்கைக்கு விரோதமல்லவா? எனவே ஏணியாக மாறினார்.

லால் பகதூர் சாஸ்திரி அவர்களும், உந்திரா காந்தியவரகளும் அரசரகளானார்கள் (பிரதமர்கள்) என்றால் அந்த அரசர்களை உருவாக்கிய அரசர் காமராஜர்தான்.

கம்பன் இராமனை ‘இரு கை வேழத்து இராகவன்’ என்று புகழ்ந்து பேசுவான்.

வேழம் என்றால் யானை. யானையின் கை நீளமானது. பொதுவாகவே ஆள்பவர்ளுக்கு கை நீளம்தான்.

ஆள்பவரின் கைகள் நீளமாயிருக்கலாம். அவை நீளுமானால் ஆட்சிக் காலம் நீளாது.

காமராஜரின் கைகளும் நீளமாயிருக்கலாம். முழங்கால்கள்வரை நீண்டு இருக்கும்.

கம்பன் இராமனை நீண்ட கரங்களை உடையவன் என்று மட்டும் கூறியிருக்கலாம். நமக்கும் புரியும்தான். அதன் பின் ஏன் யானையின் தும்பிக்கை போன்று நீளமான கை என்றான்?

இராமருக்கு பொருந்தியது அப்படியே பெருந்தலைவர் காமராஜருக்குக்கும் பொருந்துவமைக் காணுங்கள்.

யானையின் தும்பிக்கை பாகனை மேலே தூக்கிவிடப் பயன்படும்.

அதுபோல் இராமன் கிஷ்கிந்தையில் வாழ்ந்த சுக்கிரிவனுக்கு முடிசூட்டு மன்ன்னனாக்கி சிம்மாசனத்தின் மேல் அமர வைத்தான். அது மட்டுமன்றி இலங்கை முடியை வீடணனுக்கு சூட்டித் தம்பியைத் தலைவனாக்கினான்.

யானை தன் நீண்ட கரத்தால் பாகனைத் தூக்கித் தன் தலைமேல் அமர்த்துவதைப்போல், இராமனும் இருவருக்கு பலைமைப் தவி பந்து சிறப்பித்தான்.

எனவேதான் கம்பன், இராமனை ‘இருகை வேழத்து இராகவன்’ என்று புகழ்ந்தான்.

ஆகவேதான் இரமனுக்கும் காமராஜருக்கும் பொருத்தமுண்டு என்பது.

இராமனும் பதவியைத் துறந்து வந்தான். காமராஜரும் பதவியைத் துறந்துவந்தார்.

இராமன் காலத்தின் சூழ்நிலையால் சுக்கிரிவனுக்கும், வீடணனுக்கும் முடிசூட்டி மன்னனாக்கினான். காமராஜரோ அரசியல் சூழ்நிலையால், பாரதத்திற்கு லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரைப் பிரதமராக்கி நிலை நிறுத்திக் காட்டினார்.

இவ்வாறு அரசர்களை உருவாக்க வேண்டுமானால் அவரிடம் பேரரசர்க்கு உரிய தகுதி இருக்கிறதென்று அர்த்தம். அதனால்மான் தலைவர்களை உருவாக்கியவரை பெருந்தலைவர் என்றனர்.

எவ்வளவு பொருத்தம்!

பட்டங்கள் பலருக்கும் வந்து சேரும்; நின்று பொருந்தாது. ஆனால் காமராஜரைப் ‘பெருந்தலைவர்’ என்றது என்றென்றும் பொருந்தும்.

அரசியல்வாதிகள் அஸ்திவாரத்தோடு உருவாக வேண்டும் அத்தகையவர்களால்தான் பலரை உருவாக்க முடியும் என்னும் உயர்ந்த பாடத்தை பெருந்தலைவரிடமிருந்துதான் படிக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *