நகராட்சித் தலைவர்

posted in: Leadership, politics | 8

விடுதலைப் போரட்டத்தில் தீவிரமாக்க் காமராஜர் ஈடுபட்டார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டார். அந்த வேளையில் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேரந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருக்கும் போதே நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நகர் மன்றக் கூட்டங்களில் காமராஜர் கலந்து கொள்ளவில்லை. 1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் காமராஜ் விடுதலை ஆனார்.

1942 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி நகர் மன்றக்கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர், கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காமராஜர்-


“என்னை நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுத்தது குறித்து மகிழ்ச்சி, எனக்குப்பல முக்கிய பணிகள் இருப்பதால் நான் நகர் மன்றத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1942 ஆகஸ்டு மாதம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். பின்னர் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். 1945இல் காமராஜர் விடுதலை செய்யப்பட்டார். 1946 -ஆம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

பின்னர் அதே ஆண்டு சென்னை சட்ட மன்றத்திற்கும் காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம்நாள் இந்தியா விடுதலை பெற்றது. பண்டித நேருவின் தலைமையில் இடைக்கால அரசு உருவானது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். 1948ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆனார். 1950 ஆம் ஆண்டு நான்காவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார்.

8 Responses

  1. varadharaj

    Hi,

    These inforamations are not enough….. Thanga Thalaivar’s life will be full of moral stories only…

    Better you can collect more informations and bring it as a moral book for students.

    He is an ideal person…..

  2. Pandiarajan

    BHEL trichy, Neyveli lignite corporation , IIT chennai……all these industries and most of the dams in tamilnadu constructed by him.

    1.EDUCATION/ FREE MEAL
    2.ERADICATION OF UNTOUCHABILITY
    3.INDUSTRIES REVOLUTION.
    4.MASSIVE AGRICULTURE GROWTH.
    5.PUBLIC HEALTH CENTRE.
    6.SAVED INDIA FROM DEADLY MOMENTS.
    7.RESIGNED HIS CM POST TO WORK FOR THE PARTY AND PEOPLE(K-PLAN)
    8.FRIENDLINESS WITH ALL THE OPPOSING PARTY.
    9.HYDEL POWER PLANT.

    NO WORDS TO EXPLAIN……ITS ALL HE HAD DONE IN 9YEARS.

  3. ARAVINTH BABLOO

    we need more information and full life history of kalvi kan thirantha PERUNTHALAIVAR. KAMARJAR
    ITS NOT ENOUGH FOR US

  4. Mahalakshmi.P

    its greate leader of the world. My favourite leader .Mr.Kamarajar

Leave a Reply to charudeshni Cancel reply

Your email address will not be published. Required fields are marked *